திருடியதாக நினைத்து தொழிலாளியை தாக்கியவர் கைது

5 hours ago 3

 

திருச்சி, மே 6: திருச்சியில் தொழிலாளியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி திருவனைக்காவல் திருவளர்ச்சோலை கிழக்கு தெருவை சேர்ந்தவர் அருண்குமார்(32). திருவானைக்காவல் மல்லிகைபுரத்தை சேர்ந்தவர் கருணாகரன்(30). இருவரும் பொன்னுரங்கபுரத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் கருணாகரனின் செல்போன், பணம் திருட்டு போனது. அருண்குமார் தான் செல்போன், பணத்தை எடுத்திருப்பார் என்று நினைத்து அவரை நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து கடந்த 24ம் தேதி கருணாகரன் தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த அருண்குமார் ரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதுகுறித்து ரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து கருணாகரனை கைது செய்தனர். மேலும், 2 பேரை தேடி வருகின்றனர்.

The post திருடியதாக நினைத்து தொழிலாளியை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article