திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம்: கோயில் நிர்​வாகம் அறிவிப்பு

10 hours ago 5

தூத்​துக்​குடி: திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்​குள் மகா கும்​பாபிஷேகம் நடத்​தப்​படும் என்று கோயில் நிர்​வாகம் அறி​வித்​துள்​ளது. அறு​படை வீடு​களில் 2-ம் படை வீடான திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் ஜூலை 7-ம் தேதி கும்​பாபிஷேகம் நடத்த அறநிலை​யத்​துறை திட்​ட​மிட்​டுள்​ளது.

இதில், கும்​பாபிஷேகம் நடத்​து​வதற்​கான நேரத்தை முடிவு செய்​வ​தில் கோயில் நிர்​வாகம் மற்​றும் கோயில் விதாயகர்த்தா இடையே கருத்து வேறு​பாடு நிலவி வந்​தது. இது தொடர்​பாக நீதி​மன்​றத்​தில் வழக்​கும் தொடரப்​பட்​டு, உச்ச நீதி​மன்​றம் அந்த வழக்கை கடந்த இரு தினங்​களுக்கு முன்பு தள்​ளு​படி செய்​தது. இந்​நிலை​யில், திருச்​செந்​தூர் கோயி​லில் ஜூலை 7-ம் தேதி கும்​பாபிஷேகம் நடக்​கும் நேரத்தை கோயில் நிர்​வாகம் நேற்று மாலை அறி​வித்​தது.

இதுகுறித்து அறநிலை​யத் துறை இணை ஆணை​யர் சு.​ஞான​சேகரன் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில், “திருச்​செந்​தூர் கோயி​லில் 12 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை நடக்​கும் குட​முழுக்கு விழா இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை சிறப்​பாக நடை​பெற உள்​ளது.

அதில் முக்​கிய நிகழ்ச்​சி​யான திருக்​குட நன்​னீ​ராட்டு விழா ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்​குள் நடத்​தப்​படும்” என்று தெரி​வித்​துள்​ளார். மகா கும்​பாபிஷேகம் நடத்​தப்​படும் முகூர்த்த நேரத்தை கோயில் நிர்​வாகம் அறி​வித்​து, இது தொடர்​பான சர்ச்​சைகளுக்கு முற்​றுப்​புள்​ளி வைத்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

The post திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம்: கோயில் நிர்​வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article