தூத்துக்குடி: திருச்செந்தூரில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்வதற்காக சாக்கடை தொட்டிக்குள் இறங்கிய மாற்றுத் திறனாளி தூய்மைப் பணியாளர் கழிவுநீரில் மூழ்கி உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகேயுள்ள ஆலடிப்பட்டியைச் சேர்ந்தவர் சுடலைமணி(40). மாற்றுத் திறனாளியான இவர், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார்.