திருச்செந்தூரில் கடல் 60 அடி உள்வாங்கியது

21 hours ago 4

திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே நேற்று கடல் சுமார் 60 அடி உள்வாங்கியதால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர்.

அவ்வாறு வரும் பக்தர்கள் அதிகாலை முதல் இரவு வரை உற்சாகமாக நீராடி மகிழ்கின்றனர். இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி விட்டது. இதேபோல நேற்று அதிகாலை 3.40 மணி முதல் இன்று 28ம்தேதி அதிகாலை 1.31 மணி வரை அமாவாசை உள்ளது.

இதன் காரணமாக கோயில் கடற்கரையில் அய்யா கோயில் அருகே நேற்று சுமார் 60 அடி தூரம் கடல் உள்வாங்கி பாறைகள் வெளியே தெரிந்தது. கடல் அலை உள்வாங்குவதும், வெளியேறுமாக இருந்தபோதிலும் பக்தர்கள் எவ்வித அச்சமின்றி வழக்கம் போல கடலில் புனித நீராடினர். தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

The post திருச்செந்தூரில் கடல் 60 அடி உள்வாங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article