திருச்சி, மே 6: திருச்சியில் வாலிபரிடம் பணம் பறித்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி ரங்கம் கீதாபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(49). இவர் கடந்த 3ம் தேதி திருவானைக்காவல் மயானம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 மர்ம நபர்கள், ரவிச்சந்திரனிடம் ரூ.2000 கேட்டு தகராறு செய்தனர்.
இதற்கு மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றனர். இது குறித்து ரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடியான அருண்குமார்(23) மற்றும் தனுஷ்(21), பிரசன்னா(24), அரவிந்தன்(24) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, ரூ.2000 மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
The post திருச்சியில் பணம் பறித்த 4 பேர் கைது appeared first on Dinakaran.