திருச்சியில் கட்டுக்கட்டாக ஹவாலா பணம் 2 பேரிடம் போலீசார் விசாரணை

6 months ago 46
திருச்சியில் கட்டுக்கட்டாக ஹவாலா பணம் சிக்கியது. கஞ்சா, போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுக்கும் வகையில் வார இறுதி நாட்களில் போலீசார் ஆபரேஷன் அகழி என்ற திட்டத்தில் தனியார் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், லாட்ஜ்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தி வருகிறார்கள். உறையூரில் நேற்று ஒரு அறையில் சோதனை இட்ட போது கணக்கில் வராத பணம் 33 லட்சம் பிடிபட்டது. இது தொடர்பாக அந்த அறையில் தங்கி இருந்த பிரபு, கிருஷ்ணன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Read Entire Article