வில்லங்கப் பேச்சால் அமைச்சர் பொன்முடியின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டு அவரிடமிருந்த துணைப் பொதுச்செயலாளர் பதவியை திருச்சி சிவாவிடம் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். மூத்த அமைச்சரான பொன்முடியின் கட்சி பதவியை பறித்தது மற்றவர்களுக்கான எச்சரிக்கை. அந்த வகையில் ஸ்டாலின் எடுத்துள்ள இந்த நடவடிக்கை கட்சிக்கு ஆரோக்கியமான விஷயம் தான் என்றாலும் பொன்முடியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை திருச்சி சிவாவுக்கு தந்திருப்பது பல்வேறு ஊகங்களைக் கிளப்பி விட்டிருக்கிறது.
இதன் மூலம் சில விஷயங்களை திமுக தலைமை சொல்லாமல் சொல்லி இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். சிவாவை லைம்லைட்டுக்கு கொண்டு வந்திருப்பதன் மூலம் கட்சியின் முதன்மைச் செயலாளரான அமைச்சர் கே.என்.நேருவுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டிருப்பதாகச் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.