திருச்சி சிறையில் சீன கைதிகளிடம் ஈ.டி. விசாரணை

6 months ago 16

திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கை, வங்கதேசம், நைஜீரியா, சீனா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். ெசன்னையில் சமீபத்தில் இணையதளம் வாயிலாக ஆபாசமான படங்களை அனுப்பியது, பல்வேறு யுத்திகளை கையாண்டு இணையதளம் வாயிலாக மிரட்டி பணம் பறித்ததாக சீனாவை சேர்ந்த யுவான்லூன்(25), ஷியோ யமாவ்(40) ஆகியோரை சென்னை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்தனர். இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 பேர் நேற்று காலை காரில் இந்த சிறப்பு முகாமுக்கு வந்து, சீனாவை சேர்ந்த 2 பேரையும் தனியாக ஒரு அறையில் வைத்து துருவி துருவி விசாரணை நடத்தினர்.

The post திருச்சி சிறையில் சீன கைதிகளிடம் ஈ.டி. விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article