திருச்சி ஏர்போர்ட் 8 பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

7 months ago 32

திருச்சி: திருச்சி மாநகரில் நேற்று முன்தினம் 8 பள்ளிகளுக்கு மற்றும் ஒரு கல்லூரிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. போலீசார் நடத்திய சோதனை அது புரளி என தெரியவந்தது. இந்நிலையில், நேற்றும் திருச்சி மாநகரில் உள்ள 5 பள்ளிகள், ஒரு கல்லூரி, திருச்சி ஏர்போர்ட் மற்றும் ஈரோட்டில் உள்ள 3 பள்ளிகளுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திருச்சி ஏர்போர்டில் போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் அங்குலம், அங்குலமாக சோதனையிட்டனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post திருச்சி ஏர்போர்ட் 8 பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Read Entire Article