
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோட்டில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10.20 மணிக்கு ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் ரெயில் (வண்டி எண்.56812), அதற்கு மாற்றாக, ஈரோட்டில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு ஜோலார்பேட்டை சென்றடையும்.
இதேபோல, திருச்சியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும் பயணிகள் ரெயில்(56105), அதற்கு மாற்றாக திருச்சியில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு ஈரோடு செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.