திரிபுராவில் ரூ. 7 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்

1 day ago 5

அகர்தலா,

போதைப்பொருள் கடத்தல் குறித்து அசாம் ரைபிள்ஸ் மற்றும் வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திரிபுராவின் மாநிலத்தின் தெலியாமுராவில் வாகன் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றில் அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் போதை மாத்திரைகளை வாகனத்தில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இந்த சோதனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள 70,000 யாபா மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் இதனை கடத்தி வந்த மேற்கு திரிபுராவைச் சேர்ந்த ஷமல் மஜும்தார் மற்றும் வடக்கு திரிபுராவைச் சேர்ந்த மலாயா தேப்நாத் ஆகிய இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article