திரண்ட மகளிர் படை முதல் தீர்மானங்கள் வரை: விசிக மது ஒழிப்பு மாநாடு ஹைலைட்ஸ்

2 hours ago 2

தமிழக அரசு முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என விசிக துணை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் புதன்கிழமை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் தீர்மானங்களை வாசித்தார். அதன் விவரம்:

  • இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 47-ல் கூறியுள்ளவாறு, மதுவிலக்கை தேசியக் கொள்கையாக வரையறுக்கவும், சட்டமியற்ற வேண்டும்.
  • மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்கிடவேண்டும்.
  • மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி பகிர்வு அளிக்க வேண்டும்.
  • மதுவிலக்கு விசாரணை ஆணையம் அமைத்திடவேண்டும்.
  • தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கால அட்டவணையை வெளியிடவேண்டும்.
  • மனித வளத்தை பாதுகாக்கும் பொருட்டு தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும்.
  • தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
  • மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பரப்பியக்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்.
  • மது மற்றும் போதை அடிமையானவர்களுக்கும் மறுவாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைத்திடவேண்டும்.
  • டாஸ்மாக்கில் பணிபுரியும் சற்றேறக்குறைய 30 ஆயிரம் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்கிடவேண்டும்.
  • மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கும், மது விலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பவேண்டும்.
  • மதுவிலக்கு பரப்பியக்கத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து பரப்புரை மேற்கொள்ளவேண்டும்.
  • மதுவிலக்கு போராளி சசிபெருமாள் பிறந்த தினத்தின்போது டாஸ்மாக் கடைகளிக்கு விடுமுறை அளிக்கவேண்டும்.

இந்தத் தீர்மானங்களை வாசித்து, அதை நிறைவேற்றித் தருமாறு திரண்டிருந்த தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார் திருமாவளவன். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் ஆர்ப்பரித்து நிறைவேற்றும் என கோஷமிட்டனர்.

Read Entire Article