திமுகவினருக்கு மட்டும் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியது எப்படி? - காவல் ஆணையருக்கு எதிராக பாமக வழக்கு

4 months ago 15

சென்னை: தமிழக ஆளுநரைக் கண்டித்து போராட்டம் நடத்த திமுகவினருக்கு மட்டும் விதிகளை மீறி அனுமதி வழங்கியது எப்படி என கேள்வி எழுப்பியுள்ள பாமக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகர காவல் ஆணையருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து சவுமியா அன்புமணி தலைமையில் பாமக மகளிரணி கடந்த ஜன.2-ம் தேதி அன்று வள்ளுவர் கோட்டம் முன்பாக போராட்டம் நடத்த முயன்றது. இதற்கு அனுமதி மறுத்த போலீஸார் அவர்களை கைது செய்தனர். 5 நாட்களுக்கு முன்பாக அனுமதி கோரி விண்ணப்பிக்கவில்லை என போலீஸ் தரப்பில் காரணம் தெரிவிக்கப்பட்டது.

Read Entire Article