பரமக்குடி,டிச.4: பரமக்குடியில் திமுக மகளிர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை யொட்டி வைகை ஆற்றின் கரையோரத்தில் 5 ஆயிரம் பனை விதைகள் விதைப்பை எம்எல்ஏ முருகேசன் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாவட்ட மகளிர் அணி சார்பாக வைகை ஆற்றின் இரு கரையோரங்களில் 5 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் பணி தொடங்கியது.
இதனை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, திமுக நெசவாளர் அணி சார்பில் நேருஜி மைதானத்தில் நடைபெற்ற அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், நகர் மன்ற உறுப்பினர்கள் சர்மிளா அக்பர்,மாலிக், கருப்பையா, நெசவாளர் அணி அமைப்பாளர் சந்திரசேகர், துணை அமைப்பாளர் கேபி ராஜன், தகவல் தொடர்பு அணி நிர்வாகி நவசக்தி ராதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post திமுக மகளிர் அணி சார்பில் 5 ஆயிரம் பனை விதைகள் விதைப்பு appeared first on Dinakaran.