திமுக பவள விழா கூட்ட திடலை நோக்கி பேரணி: பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் கைது

2 hours ago 2

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திமுக பவள விழா பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு நடைபயணமாக வர முயன்ற பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த 13 பேர் இன்று (செப்டம்பர் 28-ம் தேதி) கைது செய்யப்பட்டனர்.

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் அமைகிறது. இதற்காக பரந்தூரைச் சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனை எதிர்த்து ஏகனாபுரத்தை மையமாக வைத்து கடந்த 2 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

Read Entire Article