கோவை: திமுக கூட்டணி உடையும் என அதிமுகவும், பாஜகவும் பகல் கனவு காண்கின்றன என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''இண்டியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும், பாஜகவினரும் கூறுவது போன்று கூட்டணியில் எந்தவிதமான ஓட்டையும் இல்லை. நெல்லிக்காய் மூட்டை தான் சிதறும். சிதறுவதற்கு இது நெல்லிக்காய் மூட்டை கிடையாது. இது எஃகு கோட்டை கூட்டணி. இது சிதறுவதற்கு வாய்ப்பு இல்லை.