சென்னை: தமிழ் குறித்து திமுக அரசுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில், ‘‘தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை நடைமுறையில் உள்ள நிலையில், வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவ தமிழக அரசு அமைக்கும் உதவி மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தி தெரிந்தால்தான் வேலைவாய்ப்பு என்று திமுக அரசு கூறுவது அப்பட்டமான இந்தி திணிப்பாகும்’’ என தெரிவித்திருந்தார்.