திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சங்கு என்ற 3 வயது சிறுவன் பேசும் ஒரு வீடியோ வைரலாக பரவியது. அந்த வீடியோவில் சிறுவன், அங்கன்வாடியில் தினமும் உப்புமா சாப்பிட்டு போர் அடிக்குது. அங்கன்வாடியில் பிரியாணியும், பொரிச்ச கோழியும் தர வேண்டும் என்று தனது அம்மாவிடம் சிறுவன் கூறியுள்ளான். அதை சிறுவனின் தாய் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். வைரலாக பரவிய இந்த வீடியோவை பார்த்த கேரள சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்,‘ அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு பால், முட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. சங்குவின் கோரிக்கையை ஏற்று அங்கன்வாடி மெனுவில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.
The post தினமும் உப்புமாவா… சாப்பிட பிரியாணியும், பொரிச்ச கோழியும் வேணும்: அங்கன்வாடி சிறுவனின் வீடியோ வைரல் appeared first on Dinakaran.