திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 234 மனுக்கள் பெறப்பட்டன

6 months ago 14

 

திண்டுக்கல்ல, நவ. 12: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 234 மனுக்களை பெற்றார்.  தொடர்ந்து கலெக்டர், அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் கலெக்டர், கலெக்டரின் விருப்புரிமை கொடை நிதியிலிருந்து ஒருவருக்கு விலையில்லா தையல் இயந்திரத்தை வழங்கினார். இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோட்டைக்குமார், முருகன், தனித்துணை ஆட்சியர் கங்காதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 234 மனுக்கள் பெறப்பட்டன appeared first on Dinakaran.

Read Entire Article