திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மது விற்றதாக 515 பேர் கைது: 7 பேர் மீது குண்டாஸ்

4 months ago 12

 

திண்டுக்கல், ஜன. 10: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சட்ட விரோதமாக மது விற்றதாக 515 பேரை கைது செய்த போலீசார், 7 பேரை குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்தனர். திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கடந்த 2024ம் ஆண்டு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து விற்பனை செய்வது தொடர்பாக 809 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த வழக்குகள் சம்பந்தமாக 515 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மாவட்ட எஸ்பி பிரதீப் பரிந்துரையின்படி கலெக்டர் பூங்கொடி உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி முருகன், எஸ்ஐ ஜெய்கணேஷ் மற்றும் போலீசார் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு 7 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

The post திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மது விற்றதாக 515 பேர் கைது: 7 பேர் மீது குண்டாஸ் appeared first on Dinakaran.

Read Entire Article