திண்டிவனம் அருகே குடி பழக்கத்தை நிறுத்த கோயிலுக்கு சென்று கயிறு கட்ட மனைவி அழைத்ததால் லைன்மேன் தற்கொலை

1 month ago 3

திண்டிவனம், மே 15: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பிரம்மதேசம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடசல் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் முருகன்(48). இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் லைன் மேனாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பரிமளா என்ற மனைவியும், பவித்ரா(25) என்ற மகளும், அஜய் (18) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் முருகனுக்கு அதிக குடிப்பழக்கம் இருப்பதால் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்காக கோயிலுக்கு சென்று கயிறு கட்டி வரலாம் என்று பரிமளா கூறிவிட்டு பால் கறக்க சென்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து முருகன் வீட்டின் போர்டிகோவில் உள்ள பேனில் புடவையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பிரம்மதேசம் போலீசார் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிப்பழக்கத்தால் லைன்மேன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post திண்டிவனம் அருகே குடி பழக்கத்தை நிறுத்த கோயிலுக்கு சென்று கயிறு கட்ட மனைவி அழைத்ததால் லைன்மேன் தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article