
டெல்லி,
உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளம் எக்ஸ் (டுவிட்டர்). கோடிக்கணக்கான மக்கள் எக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் இன்று எக்ஸ் வலைதளம் திடீரென முடங்கியுள்ளது. மாலை 6 மணிமுதல் எக்ஸ் வலைதளத்தில் டுவிட் செய்ய முடியாமலும், டுவிட் செய்யப்பட்ட பதிவுகளை ரிபிரஷ் செய்ய முடியாமலும் பயனாளர்கள் அவதியடைந்துள்ளனர். அதேபோல், எக்ஸ் தளத்தில் லாக் இன் , லாக் அவுட் செய்ய முடியாத சூழ்நிலையும் நிலவி வருகிறது.