திசைகளும் பலன்களும்!

5 hours ago 4

* கிழக்கு முகமாக நின்றுதான் பல் தேய்த்து, குளிக்க வேண்டும்.
* நதிகளில் புனித நீராடினால் நதிநீர் புறப்படும் திசை அறிந்து, அதை நோக்கி மூழ்கி குளிக்க வேண்டும்.
* கடவுள் விக்கிரகமோ, படமோ வைத்து பூஜிக்கும்போது நேர்முகமாக நமஸ்கரிக்க வேண்டும். தெற்கு முகமாக நமஸ்கரிக்க கூடாது.
* வாசலில் நேர் கோட்டில் கோலம் போட்டால் தெற்கிலிருந்து வடக்காக கோடுகளை இழுக்க வேண்டும். கிழக்கு அல்லது மேற்கு பார்க்க நின்று கொண்டு கோலமிட வேண்டும்.
* பூஜை செய்யும்போது, மந்திரங்கள் சொல்லும் போது பலகையில் அமர்ந்து, வடக்கு அல்லது கிழக்கு பார்த்து செய்ய வேண்டும்.
* தீபம் கிழக்கு நோக்கி இருப்பதே நலம்.
* வெளியே புறப்படும்போது சற்று வடக்கே நடந்து விட்டு புறப்படுவது நல்லது.
* இரண்டு பேருக்கு மேல் சாப்பிட்டால் வடக்கு முகம் பார்த்து அமரலாம். ஒருவர் மட்டும் என்றால் வடக்கு உகந்ததல்ல.
* புதுத் துணியை கிழக்கு முகம் பார்த்து அணிய வேண்டும்.
* குழந்தைகளை கிழக்கு பார்த்து உட்கார வைத்துதான் எந்த நல்ல காரியமும் செய்ய வேண்டும்.
* வேட்டி, புடவையின் தலைப்பு பாகத்தை தெற்கு பார்த்து உலர்த்தக் கூடாது.
* நாம் நடக்கும் பாதையில் துளசி செடி, பசு தென்பட்டால் நாம் வலமாக செல்வது நல்லது.
* மருந்தை கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி உட் கொள்ள வேண்டும்.
* வடக்கு பக்கம் தலை வைத்து தூங்கக் கூடாது என்பது நமக்கு தெரிந்தது தானே.மேலே சொன்ன அனைத்தும் நம்பிக்கை அடிப்படையிலானதே. அவரவர் நம்பிக்கைக்கேற்ப கடைபிடிக்கலாம். இவற்றில் சில வகை மதங்கள் அடிப்படையிலும் கூட மாறுபடும்.
– அண்ணா அன்பழகன்.

The post திசைகளும் பலன்களும்! appeared first on Dinakaran.

Read Entire Article