தி.மு.க. ஆட்சியில் போலீசாரின் அராஜகம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது - வானதி சீனிவாசன்

5 hours ago 1

தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 27 வயது இளைஞர் அஜித், காவலர்களால் அடித்துத் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது தமிழகத்தில் காவல்துறை நிர்வாகம் முற்றிலுமாக சீரழந்துவிட்டதை அப்பட்டமாகத் காட்டுகிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, காவல்துறையின் கொடூரப் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏழை, எளிய மக்களைக் காவல்துறையினர் துன்புறுத்தும் நிலை சாதாரணமாகிவிட்டது.

ஆளுங்கட்சியினர், அவர்கள் கட்சி சார்பினர் செய்யும் குற்றங்களுக்கு பாதிக்கப்பட்டவர்களையே அடக்கி ஒடுக்கி வரும் தி.மு.க. ஆட்சியில் போலீசாரின் அராஜகம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது.

ஏழைகள், சாமானிய மக்கள் மீதான இந்தக் கொடூரத் தாக்குதல்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் கூறியாக வேண்டும். மேலும், அஜித் மரணத்தில் தொடர்புடைய காவலர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். கொலைக்குப் பொறுப்பான அதிகாரிகள் அனைவரும் கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article