சென்னை: திருவண்ணாமலை அரசுப் பள்ளியில் சிறுவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் சத்துணவுப் பணியாளர்கள் 2 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சமூகநலத் துறை தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியம் செங்குணம் கொல்லைமேடு பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 42 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவனை, சத்துணவுப் பணியாளர்கள் துடைப்பத்தால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது தொடர்பாக, சமூகநலத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் நேரடி விசாரணை நடத்தப்பட்டது.