தாவரவியல் பூங்காவில் பூத்த சிவப்பு நிற சால்வியா மலர்கள்

6 months ago 17

 

ஊட்டி, நவ. 12: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துள்ள சிவப்பு நிற சால்வியா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இரண்டாவது சீசனை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் சால்வியா, பேன்சி, அம்ரந்தஸ் போன்ற மலர்கள் பல வண்ணங்களில் பூத்து காணப்பட்டது. இந்த மலர் அலங்காரங்களை கடந்த 2 மாதங்களாக உளட்டி வந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். தற்போது பூங்காவில் உள்ள அனைத்து மலர் செடிகளும் காய்ந்து போய் விட்டது. மேலும், தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகளும் வாடியுள்ளன. ஆனால், பூங்கா முழுவதிலும் தற்போது சிவப்பு நிறத்தில் பூத்துள்ள சால்வியா மலர்கள் மட்டும் வாடாமல் உள்ளது.

பூங்காவின் பல்வேறு பகுதிகளிலும் பூத்துள்ள இந்த மலர்களையே சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். குறிப்பாக, பூங்காவிற்குள் செல்லும் சாலையில் நுழைவு வாயில் முதல் கண்ணாடி மாளிகை வரை சாலையின் இரு புறங்களிலும் சிவப்பு நிறத்தில் பூத்துள்ள சால்வியா மலர்கள் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது. பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து கொள்கின்றனர். முதல் சீசனுக்கான பணிகள் ஓரிரு நாட்களில் துவக்கப்படும் நிலையில், பூங்காவில் அனைத்து செடிகளிலும் இனி வரும் ஏப்ரல் மாதமே மலர்களை காண வாய்ப்புள்ளது.

The post தாவரவியல் பூங்காவில் பூத்த சிவப்பு நிற சால்வியா மலர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article