தாலுகா அலுவலகங்களில் டிச.14ல் பொது விநியோக சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

6 months ago 19

திண்டுக்கல், டிச. 13: திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களில் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் டிச.14ம் தேதி பொது விநியோகத் திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் டிச.14ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரி மனு அளிக்கலாம். மேலும், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் தொடர்பாக மனு அளிக்கலாம். எனவே, இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை தொடர்பான மனு அளித்து தீர்வு காணலாம். என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post தாலுகா அலுவலகங்களில் டிச.14ல் பொது விநியோக சிறப்பு குறைதீர்க்கும் முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article