தாராபுரத்தில் கட்சி கொடிக்கம்பம், கல்வெட்டு அகற்றம்

4 days ago 7

தாராபுரம், ஜூன் 5: நாடு முழுவதும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கட்சி கொடிக்கம்பங்கள், கல்வெட்டுகள் உள்ளிட்டவர்களை அந்தந்த கட்சியைச் சார்ந்த நிர்வாகிகளை தாங்களே முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கான முன்னறிவிப்பு கொடுத்து தவணை தேதி முடிந்த பின்பும் கொடி கம்பங்களை அகற்றாமல் இருந்தால் நகராட்சி நிர்வாகம் தலையிட்டு கொடிக்கம்பங்களை அகற்றலாம் என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி நேற்று நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் முன்னிலையில் தாராபுரம் அண்ணா சிலையின் பின்புறம் இருந்த 15-க்கு மேற்பட்ட கொடி கம்பங்கள் கட்சி நிர்வாகிகளாலும், கம்பங்களை அகற்றி தராத சில கட்சி நிர்வாகிகளை கொடிக்கம்பங்களை அகற்ற அறிவுறுத்தியும் வராத நிலையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றி நகராட்சி வாகனத்தில் எடுத்துக் கொண்டு சென்றனர்.

The post தாராபுரத்தில் கட்சி கொடிக்கம்பம், கல்வெட்டு அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article