தலைமறைவாக இருந்தவர் கைது

2 months ago 9

சேலம், நவ.15: சேலம் கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் கூழை பிரபு(25). கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்பட பல்வேறு வழக்குகள் இவர் மீது இருக்கிறது. இந்நிலையில் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் சேலம் கோர்ட்டில் ஆஜராகாமல் கடந்த 1 ஆண்டாக அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கிச்சிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் தலைமையிலான போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post தலைமறைவாக இருந்தவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article