தலித் முதியவர் படுகொலை; வன்கொடுமை தடுப்பு சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

5 months ago 28

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், அருமலைக்கோட்டை கிராமத்தில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த முதியவர் அருணாச்சலம் சாதி ஆதிக்க வெறிச் செயலுக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். பட்டியல் சமூக முதியவர் 62 வயதான அருணாச்சலம் அதே ஊரைச் சேர்ந்த விவேக் என்கிற இளைஞனால் சாராய பாட்டிலால் கழுத்திலும் உடலிலும் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

தமிழ்நாடு அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் நிதி உதவியை தாமதமின்றி வழங்கிட வேண்டும். அரசு வேலையை அருணாச்சலம் மகன் மணிகண்டனுக்கு விரைந்து வழங்கிட வேண்டும். இதுபோன்ற வன்செயல்களுக்கும், சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கும் காரணமாக உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும்.

The post தலித் முதியவர் படுகொலை; வன்கொடுமை தடுப்பு சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article