தர்மபுரி நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்

2 months ago 13

தர்மபுரி: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடவடிக்கைகளை கண்டித்து பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். இந்நிலையில், தர்மபுரி வெண்ணாம்பட்டியில், நாதகவில் இருந்து விலகிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. நிர்வாகிகள் கூறுகையில், விரைவில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களும் விலக உள்ளனர். சுமார் 300 பேர் விலகுகின்றனர்.

முக்கிய பொறுப்பாளர்களான அரூர் சட்டமன்ற தொகுதி தலைவர் இளையராஜா, பொருளாளர் சுரேஷ், அரூர் ஒன்றிய பொறுப்பாளர் சிவா, அரூர் தொகுதி துணை செயலாளர் வேடியப்பன், ஒன்றிய பொருளாளர் நிவாஸ், கிளை பொறுப்பாளர் அரவிந்தன், ஒன்றிய பொறுப்பாளர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர் சிவமூர்த்தி, தொகுதி இணைச்செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் பசுபதி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி பொருளாளர் ஜெயக்குமார், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் கலைச்செல்வி, கோகிலா உள்ளிட்ட பலர் விலகி உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post தர்மபுரி நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல் appeared first on Dinakaran.

Read Entire Article