டெல்லி: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஜூன் 14, 15 தேதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.21 செ.மீ.-க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு என்பதால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஜூன் 13, 16, 17 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. 12 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு என்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
கர்நாடகாவில் ஜூன் 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை கொடுத்துள்ளது. தொடர்ந்து ஜூன் 16, 17-ல் மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கேரளாவில் ஜூன் 14, 15, 16, 17 தேதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. தொடர்ந்து ஜூன் 12, 13ல் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டில் ஜூன் 14, 15 தேதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.