தமிழ்நாடு மீனவர்களை தொடர்ந்து கைது செய்யும் இலங்கை: கைதை கண்டித்து ராமேஸ்வரத்தில் இன்று வேலை நிறுத்தம்

2 weeks ago 2

ராமேஸ்வரம்: மீனவர்கள் கைதை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ள ராமேஸ்வர மீனவர்கள் வரும் வெள்ளி கிழமை போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ராமேஸ்வரம் மீன்படி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 300 பேரின் விசைப்படகில் 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கடலுக்கு சென்ற மீனவர்கள் தனுஷ்கோடி, தலைமன்னார் பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 3 படகுகள், மீனவர்களின் வலைகள் மற்றும் 33 மீனவர்களை சிறைபிடித்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் எல்லை தண்டி வந்து மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரும் 5ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து ராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடி துறைமுகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த போராட்டம் காரணமாக 800 விசை படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாது. 5,000க்கு மேற்பட்ட மேற்பட்ட மீனவர்கள் வேலைக்கு செல்ல இயலாது. மேலும், இலங்கை அரசையும், ஒன்றிய அரசையும் கண்டித்து மீனவர்கள் வருகின்ற வெள்ளை கிழமை ராமேஸ்வர பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ராமேஸ்வர மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.

The post தமிழ்நாடு மீனவர்களை தொடர்ந்து கைது செய்யும் இலங்கை: கைதை கண்டித்து ராமேஸ்வரத்தில் இன்று வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article