தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

6 months ago 31

 

மதுரை, நவ. 11: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயற்குழு கூட்டம், மதுரையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், மதுரை மாவட்ட செயற்குழுகூட்டம் மூட்டா அரங்கில் மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் நவம்பர் 29ம்தேதி புதுடெல்லியின் ஜந்தர்மந்தர் பகுதியில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் தர்ணா போராட்டம் நடக்கிறது.

தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், புதியகல்வி கொள்கையை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் இந்த தர்ணா போராட்டத்தில், தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் வட்டார கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்களை அலுவலகப் பணிகளுக்கு பயன்படுத்தகூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் எமிமாள் ஞானசெல்வி நன்றி கூறினார்.

The post தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article