கோவை: கர்நாடகாவில் ‘கன்னடம் வாழ்க’ எனக் கூற வலியுறுத்திய போது 'தமிழ் வாழ்க' என்றவர் ஜெயலலிதா என, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் மதுரை சென்ற போது தூர்வாரப்படாத கால்வாய் துணியால் மறைக்கப்பட்ட சம்பவம் நடந்த நிலையில், முதல்வருக்கே மாநிலத்தில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. இதுதான் திராவிட மாடல் அரசு.