சிவகாசி: அசோகரின் பிராமி எழுத்துகளில் இருந்துதான் தமிழ் வந்தது என்ற கோட்பாட்டை உடைத்து, தனக்கென்று தனி மொழி நடை, எழுத்து நடையைக் கொண்டிருக்கிற மொழி தமிழ் என்பதை தொல்லியல் ஆய்வுகள் அறிவியல் பூர்வீகமாக நிரூபித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரிசல் இலக்கியக் கழகம் சார்பில் சிவகாசியில் 2-வது கரிசல் திருவிழா நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். கரிசல் இலக்கியக் கழகச் செயலாளர் மருத்துவர் அறம் வரவேற்றார்.