‘தமிழிசை குறித்த பேச்சுக்கு திருமாவளவன் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்’ - தமிழக பாஜக

4 months ago 32

சென்னை: “பாஜக முன்னாள் தலைவர் தமிழிசையை அவமானப்படுத்தியதற்கு திருமாவளவன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மத்திய, மாநில அரசின் பெண்கள் நல அமைப்பு அவரிடம் விசாரணை நடத்தி சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விசிக மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற திருமாவளவன் குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை கூறிய கருத்தை திசை திருப்பி, தரம் தாழ்ந்த உள்நோக்கத்துடன், “அக்கா தமிழிசை குடிக்க மாட்டார்” என்று நம்புகிறேன் எனக்கூறி, தமிழிசையை பழிவாங்கும் எண்ணத்தில் மிகவும் கொச்சைப் படுத்தி, கண்டிக்கத்தக்க வகையில், அருவருப்பாக திருமாவளவன் பேசியதை தேசிய பெண்கள் நல வாரியம் விசாரித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read Entire Article