தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது: வானிலை ஆய்வு மைய தலைவர் பேட்டி

6 months ago 18

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். வங்கக்கடலில் டிச.16-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகிறது. வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 12 மணி நேரத்தில் வலுவிழக்கும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு – வடமேற்கில் நகர்ந்துள்ளது. மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வருகிறது. சென்னையில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. அடுத்தடுத்த நகர்வுகளை பொறுத்தே சென்னையின் மழை அளவு கணிக்க முடியும்

The post தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது: வானிலை ஆய்வு மைய தலைவர் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article