தமிழகத்தில் ஏப்ரல் 2, 3 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

2 days ago 3

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 2 ஆம் தேதி கோயம்பத்தூர், தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும், ஏப்ரல் 3 ஆம் தேதி கோயம்பத்தூர் , நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. மார்ச்.,30 அன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச்.,31, மற்றும் ஏப்ரல் 1 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Read Entire Article