தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி சர்வே நடத்த முதல்வர் ஸ்டாலின் ஆணையிட வேண்டும்: அன்புமணி

4 hours ago 3

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதியில் கொஞ்சமாவது அக்கறை இருந்தால் கர்நாடக முதல்வரிடமிருந்து சமூகநீதிப் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி சர்வே நடத்த அவர் ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் சார்பில் 2027 ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில், கர்நாடக அரசின் சார்பில் மீண்டும் சாதிவாரி மக்கள்தொகை சர்வே நடத்தப்படுவது ஏன்? என்பது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமய்யா அற்புதமான விளக்கம் அளித்திருக்கிறார். இவ்வளவுக்குப் பிறகும் சாதிவாரி சர்வே நடத்த தமிழக அரசு மறுப்பது அதன் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.

Read Entire Article