சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கை: திமுக ஆட்சியமைத்தது முதல் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகளில், 8,500 பேருந்துகள் புதிதாக வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பில் கால் பகுதி பேருந்துகள்கூட வாங்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
குறிப்பாக, சென்னை, மேற்கு தாம்பரத்திலிருந்து மண்ணிவாக்கம், முடிச்சூர், வண்டலூர் போன்ற பகுதிகளுக்கு இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலான ஒரு மணி நேரத்தில் 12 பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். ஆனால், வெறும் மூன்று பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக கள நிலவரம் தெரிவிக்கிறது.