தமிழகத்தில் இன்று முதல் 18-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

22 hours ago 7

தமிழகத்தில் இன்று முதல் வரும் 18-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 14, 15-ம் தேதிகளில் நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடக்கு ஆந்திரா–தெற்கு ஒடிசா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூன் 13) ஓரிரு இடங்களிலும், வரும் 14, 15, 16-ம் தேதிகளில் சில இடங்களிலும், 18, 19-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Read Entire Article