தமிழகத்தில் 9 மாதத்தில் 1.33 லட்சம் கிலோ போதை பொருட்கள் பறிமுதல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

8 months ago 60

சென்னை: தமிழகத்தில் 9 மாதத்தில் ரூ.10.87கோடி மதிப்புள்ள 1லட்சத்து32,890 கிலோ குட்கா உள்ளிட்டபோதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்திய தோல் ஏற்றுமதி கழகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆகியவை இணைந்து சென்னை தீவுத்திடல் அருகே நேற்று அதிகாலை 5மணிக்கு நடத்திய போதை பொருள்இல்லாத சமூகத்துக்கான விழிப்புணர்வு மாராத்தான் போட்டியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்திய தோல் ஏற்றுமதி கழக தலைவர் ராஜேந்திர குமார் ஜலான், நிர்வாக இயக்குநர் செல்வம், காவல்துறை கூடுதல் இயக்குநர் அமல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Read Entire Article