
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் ஜூலை 3-ந் தேதி வரையில் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய சேலானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் வெப்பநிலை உயரக்கூடும். அதிகபட்சமாக நேற்று மதுரை விமான நிலையம் மற்றும் தஞ்சாவூரில் தலா 100.4 டிகிரி வெயில் பதிவானது.நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 12 செ.மீட்டர், நீலகிரி, கன்னியாகுமரியில் தலா 11 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.