தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று கனமழை: சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்

6 months ago 34

சென்னை: சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் நாளை (அக்.16) ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ளது. அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை, இந்திய பகுதிகளில் இருந்து அடுத்த 3 நாட்களில் விலகக்கூடும்.

Read Entire Article