தமிழகத்தில் 150 இடங்களில் பட்டாசு விபத்து: 544 பேருக்கு தீக்காயம்

4 months ago 18

சென்னை: தமிழகத்தில் பட்டாசு வெடித்ததால் 150 இடங்களில் தீ விபத்தும் 544 பேருக்கு தீக்காயமும் ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட குறைவு என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. பட்டாசுகளை வெடிக்கும்போது, விபத்துகளைத் தவிர்க்கும் விதமாக தமிழ்நாடு தீயணைப்புத் துறை சார்பில் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும், தீபாவளி தினத்தில் 150 இடங்களில் தீ விபத்துகளும், 544 பேருக்கு தீக்காயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

Read Entire Article