கோவை: தமிழகத்தின் தினசரி மின்தேவை 372 மில்லின் யூனிட்களாக உயர்ந்துள்ளதாகவும், தேவையை பூர்த்தி செய்ய 50 சதவீதத்திற்கு மேல் மத்திய அரசு உதவி வருவதாக தொழில்துறையினர் தெரிவத்துள்ளனர்.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சில இடங்களில் மழை பெய்த போதும், மீண்டும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் மின்தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 4-ம் தேதி தமிழகத்தின் மொத்த மின் தேவை 372.38 மில்லியன் யூனிட்களாக உயர்ந்துள்ளது. இதில் மத்திய அரசு கட்டுப்பாட்டின்கீழ் உள்ள மத்திய மின்தொகுப்பில் இருந்து 252.40 மில்லியன் யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.