தமிழக முதல்வருக்கு தேர்தல் பயம் வந்து விட்டது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்

4 hours ago 2

தூத்துக்குடி: தமிழக முதல்வருக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சட்டம்-ஒழுங்கு சரியில்லை. அதைப் பாதுகாப்பதில் முதல்வர் அக்கறை காட்டவில்லை. முதல்வரின் கவனம் முழுவதும், பாஜக-அதிமுக கூட்டணியை குறை சொல்வதில்தான் உள்ளது.

மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். கிராமங்களில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. திருநெல்வேலி மாநகரில் 15 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. இதையெல்லாம் முதல்வர் கவனிக்காமல், தேர்தல் கூட்டணி பற்றியே பேசி வருகிறார். அவருக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது.

Read Entire Article