ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை சுமார் 500 விசைப்படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் வடக்கு மன்னார் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஜான்போஸ், சுதன் ஆகிய இருவருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகள், இலங்கை கடற்படையினரால் நள்ளிரவில் சிறைப்பிடிக்கப்பட்டன.