தமிழக அரசுப் பள்ளிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

3 months ago 14

சென்னை: தமிழக அரசு, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் தஞ்சை மாவட்ட அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒரு ஆசிரியை கொலை செய்யப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பணியாளர்களுக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் அவசியம். அதாவது பள்ளிக்கு வரும் நபர் யார், எங்கிருந்து வருகிறார், என்ன காரணத்திற்காக வருகிறார் ஆகியவற்றை கேட்டறிந்து அது சம்பந்தமாக பள்ளித் தலைமையிடமும், சம்பந்தப்பட்டவரிடமும் அனுமதி பெற்றுத் தான் பள்ளிக்கு உள்ளே அனுமதிக்க வேண்டும்.

Read Entire Article